'லாக் அப்'பில் தர்ஷன்; சிறையில் பவித்ரா இரவு முழுதும் துாக்கமின்றி தவிப்பு
'லாக் அப்'பில் தர்ஷன்; சிறையில் பவித்ரா இரவு முழுதும் துாக்கமின்றி தவிப்பு
'லாக் அப்'பில் தர்ஷன்; சிறையில் பவித்ரா இரவு முழுதும் துாக்கமின்றி தவிப்பு

துாக்கமின்றி தவிப்பு
ரேணுகாசாமி கொலையில் கடந்த 11ம் தேதி தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் வைத்து தான், போலீசார் விசாரித்து வந்தனர். இரவிலும் அந்த அறையிலேயே துாங்கினார். ஆனால் நேற்று முன்தினம் அவரை மீண்டும் காவலில் எடுத்ததும், போலீஸ் நிலையத்தில் உள்ள செல்லில் அடைத்துள்ளனர்.
சாட்சிகள் கலைப்பு
இந்நிலையில், நேற்று காலை தர்ஷன் உட்பட நான்கு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தர்ஷனை காப்பாற்றுவதற்காக, வெளியில் இருந்து சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக போலீசார் கருதுகின்றனர். அவர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
'டார்ச்லைட்' மின்சாரம்
ரேணுகாசாமியை தாக்கிய போது, அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சியதாக கொலையாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் எலக்ட்ரிக் டார்ச் லைட்டை வைத்து, ரேணுகாசாமி உடல் மீது மின்சாரம் பாய்ச்சியது தெரியவந்துள்ளது.
ரூ.65 லட்சம் பறிமுதல்
பெங்களூரு ஆர்.ஆர்.,நகரில் உள்ள தர்ஷனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது 37 லட்சம் ரூபாய் சிக்கி இருந்தது. தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி வீட்டிலும் 3 லட்சம் ரூபாய் சிக்கியது. இந்த வழக்கில் தர்ஷனை சிக்க வைக்காமல் இருக்க, மூன்று பேர் முதலில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு 30 லட்சம் ரூபாயை தர்ஷன் கொடுத்துஉள்ளார்.
ஐ.டி., கிடுக்கி
ஒரு வழக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சிக்கினால், அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தற்போது 65 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதால், வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதவும் தயாராகி வருகின்றனர்.