சென்னைல மட்டுமா தலைநகரிலும் வக்கீல்கள் மோதல் - கும்மாங்குத்து சட்டை கிழிப்பு
சென்னைல மட்டுமா தலைநகரிலும் வக்கீல்கள் மோதல் - கும்மாங்குத்து சட்டை கிழிப்பு
சென்னைல மட்டுமா தலைநகரிலும் வக்கீல்கள் மோதல் - கும்மாங்குத்து சட்டை கிழிப்பு
UPDATED : ஜூலை 23, 2024 10:47 PM
ADDED : ஜூலை 23, 2024 10:40 PM

புதுடில்லி: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது போன்று டில்லியில் கீழ் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் இடையே அடிதடி சண்டைேயுடன் சட்டை கிழிப்பு சம்பவமும் நடந்தது.
கடந்த 20ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது; நாற்காலிகளை துாக்கிப் போட்டு தாக்கியதில், நான்கு பேர் காயம்அடைந்தனர்.
வழக்கறிஞர்கள் மோதலால், எழும்பூர் நீதிமன்ற வளாகம், கலவரம் நடந்த இடம் போல காட்சி அளித்தது.
இந்நிலையில் இதே போன்று தலைநகர் டில்லியில் கிழக்கு மாவட்டத்தில் ஷகார்பூரில் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் ஹாலில் இன்று(23.07.2024) வழக்கறிஞர்களிடையே ஏறபட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
நீண்ட நேரம் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில் களைப்படைந்த பின் அவர்களாகவே சண்டையை நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். இதனை அங்கிருந்த போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
வக்கில்கள் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
லஷ்மி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.