Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

UPDATED : ஜூன் 20, 2024 02:25 AMADDED : ஜூன் 20, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் கோரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று முக்கிய உத்தரவு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது ஏற்கனே இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு வெளியாகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us