Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ADDED : ஜூன் 20, 2024 02:24 AM


Google News
அஜ்மீரி கேட்:பருவமழைக்கு முன்னதாக, இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான கட்டடங்களை எம்.சி.டி., எனும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் கணக்கெடுத்து வருகிறது.

எம்.சி.டி.,யின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளை 12 மண்டலங்களாக பிரித்துள்ளது.

இந்த மண்டலங்களில் மொத்தம் 27,66,198 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆபத்தான கட்டடங்களை கண்டறிய ஏற்கனவே ஆய்வுப் பணியை எம்.சி.டி., கடந்த மாதமே துவக்கிவிட்டது.

கடந்த மே 31 வரை 12.19 லட்சம் வீடுகளில் ஆய்வுப் பணியை முடித்துள்ளது. இந்த மாதத்தில் 14 நாட்களில் 5,74,198 வீடுகளில் ஆய்வுப்பணி நடத்தியுள்ளது.

இதுவரை 17.94 லட்சம் வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 64 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மாநகராட்சி தரவுகளின் படி, தென் மண்டலத்துக்கு உட்பட்ட கரோல் பாக் பகுதியில் இந்த ஆய்வு 98.73 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், ஷாஹ்தரா தெற்கு மண்டலத்தில் இடிந்து விழும் தருவாயில் உள்ள ஆபத்தான பிரிவில் நான்கு கட்டடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டுஉள்ளனர்.

பராமரிப்பு பிரிவில் ஷாஹ்தரா தெற்கு மண்டலத்தில் ஒரு வீடும், ரோகிணி மண்டலத்தில் மூன்று வீடுகளும் பராமரிக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இந்த கட்டடங்கள் கடந்த 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் அடையாளம் காணப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மற்றும் பராமரிக்கக்கூடிய கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மழைக்காலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற கட்டடங்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us