Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

ADDED : ஜூலை 31, 2024 08:49 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தலைநகர் டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டில்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து தலைநகர் டில்லி , என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டம் ஆகிய பகுதிகளில் இன்று (31.07.2024) மாலை முதல் கனமழை பெய்ய துவங்கி 2 மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகருக்கு திருப்பி விடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us