கங்காதேஸ்வரா சுவாமி - ஹொன்னாதேவி கோவில்
கங்காதேஸ்வரா சுவாமி - ஹொன்னாதேவி கோவில்
கங்காதேஸ்வரா சுவாமி - ஹொன்னாதேவி கோவில்

திரேத யுகம்
இங்குள்ள 'வாக்கு விநாயகர்' விக்ரஹங்கம், ஸ்ரீராமர் அவதரித்த திரேத யுகம் காலத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. சுவாமியை, மனமுருகி வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கிறது. இதனால் பட்டே கல்லு / ஹரரே கணபதி எனும் 'வாக்கு கணபதி' என்று அழைக்கின்றனர்.
ஸ்ரீ சண்முகா
சஷ்டியின் போதும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. சண்முகா, ஆறுமுகங்கள், மயில் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். சஷ்டியன்று இவரை வழிபட்டால், அறிவும், கல்வியும் கிடைக்கும்.
பாதாள கங்கை
பாறைகளின் உள்ளிருந்து நீர் வருவதால் இதை 'பாதாள கங்கை' என்று கூறுகின்றனர். அரக்கனை வதம் செய்த பின், ஹொன்னா தேவி, கோபத்தில் தாகத்தை தணிக்க, பாறையை பிளந்ததாகவும், இதனால் பாறையில் இருந்து தண்ணீர் வெளிப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. கோடைகாலத்தில் நீர்மட்டம் அதிகமாகவும், குளிர்காலத்தில் குறைவாகவும் இருக்கும் என்பது ஆச்சரியம்.
ஹொன்னாதேவி
அசுரர்களான ரக்த பீஜாசுரன், நிசும்பனை வதம் செய்வதற்காக, சிங்கத்தின் மீது அமர்ந்து, எட்டு கரங்களுடன் ஆதிபராசக்தி தோன்றினார் என்று நம்பப்படுகிறது.
வெண்ணெயாக மாறும் நெய்
சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுகிறது. வேறு எங்கும் இத்தகைய அதிசயம் இல்லை. இந்த வெண்ணெயை சாப்பிட்டால் லட்சியங்கள் நிறைவேறும், அறிவு கிடைக்கும் என நம்புகின்றனர்.
எப்படி செல்வது
பெங்களூரில் 54 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு, பஸ், டாக்சி, கார் மூலம் செல்லலாம்.