Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தையின் தந்தை கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தையின் தந்தை கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தையின் தந்தை கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தையின் தந்தை கைது

ADDED : மார் 11, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
பெலகாவி; அடுத்த வீட்டு சிறுமியை கர்ப்பமாக்கிய, இரண்டு குழந்தைகளின் தந்தையை, 'போக்சோ' வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி, குலகோடா பகுதியைச் சேர்ந்தவர் பசப்பா அடிவேப்ப ஹல்லுார், 32; ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள்உள்ளனர்.

பசப்பா தன் வீட்டருகே வசிக்கும் 15 வயது சிறுமியிடம் நெருங்கி பழகினார். அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மனதை கலைத்துள்ளார். அவ்வப்போது, சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். நாளடைவில் சிறுமி சோர்வாக இருந்ததால், அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். பசப்பாவை பற்றி கூறினார்.

இதன்பின், குலகோடா போலீஸ் நிலையத்தில் பசப்பா மீது புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், பசப்பாவை, 'போக்சோ' வழக்கில் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us