மீனவர் படகுகளை விடுவிக்க கோரிக்கை
மீனவர் படகுகளை விடுவிக்க கோரிக்கை
மீனவர் படகுகளை விடுவிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 01:24 AM
'இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க, கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை, 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களின் 27 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழக மீனவ சமுதாயத்தினர் இடையே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.