Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் மீது புகார்

வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் மீது புகார்

வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் மீது புகார்

வாலிபர் உயிரிழப்பு டாக்டர்கள் மீது புகார்

ADDED : ஜூலை 27, 2024 05:10 AM


Google News
கலபுரகி, : வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்ந்த வாலிபரின் இறப்புக்கு, டாக்டரின் அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கலபுரகி ஜூவர்கியின் அங்கலகி கிராமத்தை சேர்ந்தவர் சரண பசப்பா, 26. இவர் இரண்டு நாட்களுக்கு முன், வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டார்.

இவரை குடும்பத்தினர், கலபுரகியில் உள்ள, 'ஹார்ட் பவுண்டேஷன்' மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவருக்கு இங்குள்ள டாக்டர்கள், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியும், அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

சரியான சிகிச்சை கிடைக்காததால், சரண பசப்பா நேற்று காலை உயிரிழந்தார்.

'இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம்' என, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us