கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கிடையாது!
கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கிடையாது!
கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கிடையாது!

பதவி பிரமாணம்
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுக்கு இடைக்கால சபாநாயகர் சுரேஷ், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஆலோசனை
வரும் 24ல் பார்லிமென்ட் கூடி, இரண்டு நாட்களுக்கு புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு முடிந்ததும், 26ல் சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அதனால், புதிய சபாநாயகர் யார் என்பதை இறுதி செய்யும் பொறுப்பை, கட்சியின் மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் வசம், பா.ஜ., தலைமை ஒப்படைத்துஉள்ளது.
போட்டிக்கு தயார்
அதேநேரத்தில், எதிர்க்கட்சி முகாமான, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், சபாநாயகர் தேர்தலை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
வெற்றி யாருக்கு?
அரசியல் சட்டத்தின் 93வது அம்சத்தின் கீழ், லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளான, 25ம் தேதி மதியம் 12:00 மணிக்குள், வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளின் எம்.பி.,க்கள் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தையும் அளித்தாக வேண்டும் என லோக்சபா செயலகம் கூறிவிட்டது.
சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற, சிம்பிள் மெஜாரிட்டியே போதுமானது. அதாவது, தேர்தல் நடக்கும் நாளன்று சபையில் ஆஜரான எம்.பி.,க்களின் எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஓட்டுகளை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.