பணியில் உள்ள 'ஓய்வு' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப தலைமை செயலர் உத்தரவு
பணியில் உள்ள 'ஓய்வு' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப தலைமை செயலர் உத்தரவு
பணியில் உள்ள 'ஓய்வு' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப தலைமை செயலர் உத்தரவு
370 பேர்
இவ்வாறு, கர்நாடகாவின் 20 துறைகளில் 370க்கும் மேற்பட்டோர் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை உடனடியாக விடுவித்து, பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை பணியமர்த்த, கடந்த ஜன., 9ம் தேதி, மாநில தலைமை செயலருக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 23, பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் குறிப்பு அனுப்பி இருந்தார்.
அறிவுறுத்தல் மீறல்
ஆனால் பெரும்பாலான துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த அறிவுறுத்தலை மீறி, ஓய்வு பெற்ற அதிகாரிகள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், மீண்டும் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
ரூ.5 லட்சம் சம்பளம்
ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - கே.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகள், நிதி அதிகாரிகள், டாக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு வாகன வசதி மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.
70 தாண்டியவர்கள்
சில துறைகளில் ஓய்வு பெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட 40 பேர், பல ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.