Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கோழிகளை தின்று தப்பிய சிறுத்தை

கோழிகளை தின்று தப்பிய சிறுத்தை

கோழிகளை தின்று தப்பிய சிறுத்தை

கோழிகளை தின்று தப்பிய சிறுத்தை

ADDED : ஜூன் 04, 2024 05:07 AM


Google News
சிக்கபல்லாபூர், : சிக்கபல்லாபூரின், நந்தி கிராமத்தில் வசிக்கும் விவசாயி லோகேஷ், லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான கோழிகளை இன்று விலை பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சிக்கபல்லாபூரில் பரவலாக மழை பெய்தது. மழைநீர் கோழிப் பண்ணையில் புகுந்தது. இதே நேரத்தில் மழையில் இருந்து தப்பிக்க, சிறுத்தை ஒன்று பண்ணைக்குள் நுழைந்தது. அங்கிருந்த கோழிகளை வயிறு முட்ட தின்றுவிட்டு, அதிகாலை ஓடிவிட்டது.

விவசாயி லோகேஷ், நேற்று காலை பண்ணைக்கு வந்தபோது, கோழிகள் சிறுத்தைக்கு பலியானது தெரிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us