Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி

ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி

ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி

ஆம்புலன்ஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி

ADDED : ஜூன் 29, 2024 11:10 PM


Google News
ஷிவமொகா: ஆம்புலன்ஸ் மீது பைக் மோதியதில், மூன்று வாலிபர்கள் பலியாயினர்.

ஷிவமொகா ஷிகாரிபுராவின் தரலகட்டா கிராமத்தின் அருகில், நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது.

பைக்கில் இருந்த பிரசன்னா, 25, கார்த்திக், 27, அஜய், 25, உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் ஷிவமொகாவின், ஜோக் கிராமத்தை சேர்ந்தவர்கள். மூவரும் ஒரே பைக்கில் செல்லும்போது, விபத்து நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us