Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணியினர் சந்திப்பு: 3 பிரச்னைகள் குறித்து முறையீடு

UPDATED : ஜூன் 02, 2024 05:58 PMADDED : ஜூன் 02, 2024 05:49 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் தேர்தல் அதிகாரிகளை இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சந்தித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன்4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தேர்தல் அதிகாரிகளை இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

3 முக்கிய பிரச்னைகள்

பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்கள் சந்திப்பில், '' 3 முக்கிய பிரச்னைகள் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். ஓட்டு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தபால் ஓட்டுகளை முதலில் எண்ணி, அதன் முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும்.

தபால் ஓட்டுகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு ஓட்டுப்பதிவு இயத்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். தபால் ஓட்டுகள் முடிவை தெரிவிக்காமல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அறிவிப்பது சட்டத்துக்கு எதிரானது'' என தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us