Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ADDED : ஜூலை 11, 2024 01:19 AM


Google News
புதுடில்லி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சி.ஆர்.பி.சி., 125வது பிரிவின்படி ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது, வரலாற்று சிறப்புமிக்க உத்தரவாக பார்க்கப்படுகிறது.

தெலுங்கானாவைச் சேர்ந்த முகமது அப்துல் சமது என்பவர், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மனைவிக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என, முகமது அப்துல் சமதுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை உறுதி செய்தது. அதே நேரத்தில், மாத ஜீவனாம்ச தொகையை 10,000 ரூபாயாக குறைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, முகமது அப்துல் சமது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவரும் தனித்தனியாக தீர்ப்பு அளித்தாலும், ஒருமித்த தீர்ப்பை அளித்துஉள்ளனர்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 125வது பிரிவின்படி, விவாகரத்து பெறும் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும். இந்த சட்டப் பிரிவானது மதச்சார்பற்றது. நாட்டில் உள்ள

தொடர்ச்சி 7ம் பக்கம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us