நியாயமான விசாரணை நடிகர் உபேந்திரா கருத்து
நியாயமான விசாரணை நடிகர் உபேந்திரா கருத்து
நியாயமான விசாரணை நடிகர் உபேந்திரா கருத்து
ADDED : ஜூன் 18, 2024 06:35 AM

பெங்களூரு: 'ரேணுகாசாமி கொலை வழக்கில், நியாயமான விசாரணைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்' என நடிகர் உபேந்திரா தெரிவித்தார்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அதே நேரத்தில் ஆழமாக விசாரிக்க வேண்டும். ரேணுகாசாமி குடும்பத்தினர், மக்கள் மற்றும் தர்ஷன் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊகங்கள் உருவாகின்றன.
எந்த வழக்காக இருந்தாலும், அந்த வழக்கு விசாரணை பற்றிய வீடியோ ஆவணங்கள், சாட்சிகள் உட்பட, அனைத்து விபரங்களையும், அவ்வப்போது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினருடன், போலீசார் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன் போலீசார், விசாரணை விபரங்களை எழுத்து மூலமாக பதிவு செய்வர். இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யலாம். இந்த ஆவணங்களை போலீசார், பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதுபோன்று செய்தால், சாட்சிகளை கலைப்பது, செல்வாக்கு மிக்கவர்களின் தலையீடு, ஊழல் போன்றவைகளுக்கு கடிவாளம் போடலாம். ரேணுகா குடும்பத்தினர், மக்கள், தர்ஷன் ரசிகர்கள், ஊடகத்தினருக்கு ஏற்பட்ட குழப்பம் நீங்கும். ஊடகங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.