மாற்று திறனாளியை அவமதித்து வீடியோ எடுத்த 2 பேர் கைது
மாற்று திறனாளியை அவமதித்து வீடியோ எடுத்த 2 பேர் கைது
மாற்று திறனாளியை அவமதித்து வீடியோ எடுத்த 2 பேர் கைது
ADDED : ஜூலை 27, 2024 05:38 AM

பெங்களூரு : பெங்களூரை சேர்ந்தவர் ரோகன் கரியப்பா, 30. ஆர்.ஜே., எனும் ரேடியோ ஜாக்கியாக உள்ளார். சில தினங்களுக்கு முன், அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் ரோகனும், அவரது நண்பர் சரவண் பட்டாச்சார்யா, 35 என்பவரும் இணைந்து ஒரு வீடியோ எடுத்தனர்.
ரோகன் கிண்டல் செய்து வீடியோவில் பேசும் போது, காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர் போன்று சரவண் சைகையில் பேசினார். இந்த வீடியோ வேகமாக பரவியது. மாற்று திறனாளிகளை அவமதித்து விட்டதாக, ரோகன், சரவண் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவர்கள் இருவரையும் கைது செய்ய கோரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர். இந்த புகார், சி.சி.பி., சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோகன், சரவணை கைது செய்தனர்.