மோதல் மாணவர்கள் 19 பேர் 'சஸ்பெண்ட்'
மோதல் மாணவர்கள் 19 பேர் 'சஸ்பெண்ட்'
மோதல் மாணவர்கள் 19 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 08, 2024 04:19 AM
பீதர், : பீதர் காந்திகஞ்ச் பகுதியில், மகாவீர் ஜெயின் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. கடந்த மாதம் 29, 30ம் தேதிகளில், கல்லுாரியில் ஆண்டு விழா நடக்க இருந்தது.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹிந்து மாணவர்கள் சிலர், கடந்த மாதம் 28ம் தேதி இரவு, 'ஜெய் ஸ்ரீராம்' பாடலை ஒலிபரப்பி, நடனமாடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு மற்றொரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். காந்திகஞ்ச் போலீசார், 19 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மோதலில் ஈடுபட்ட 19 மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்து, கல்லுாரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
இவர்களிடம் விசாரிக்க, கல்லுாரியில் ஒழுங்கு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.