Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 17 வயது சிறுமி பலாத்காரம் ஐந்தாண்டுகளுக்கு பின் புகார்

17 வயது சிறுமி பலாத்காரம் ஐந்தாண்டுகளுக்கு பின் புகார்

17 வயது சிறுமி பலாத்காரம் ஐந்தாண்டுகளுக்கு பின் புகார்

17 வயது சிறுமி பலாத்காரம் ஐந்தாண்டுகளுக்கு பின் புகார்

ADDED : ஜூன் 13, 2024 02:17 AM


Google News
சங்கம் விஹார்: மும்பையை சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு டில்லியின் சங்கம் விஹார் பகுதியில் வசிக்கிறார். அவர் மும்பையில் இருந்தபோது, இவரையும் பெண் குழந்தையையும் தவிக்க விட்டு இவரது கணவர் சென்றுவிட்டார்.

தனியே இருந்த அவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின், தன் கணவரை பிரிந்து டில்லிக்கு மகளுடன் குடியேறியுள்ளார். இங்கு இன்னொருவரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2019ல் தன் 17 வயது மகளை இவருடைய மூன்றாவது கணவன் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து, நேற்று முன்தினம் போலீசில் மும்பை பெண் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். சிறுமியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us