Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மோசடி கும்பலில் சிக்கிய 11 இந்தியர்கள் மீட்பு

மோசடி கும்பலில் சிக்கிய 11 இந்தியர்கள் மீட்பு

மோசடி கும்பலில் சிக்கிய 11 இந்தியர்கள் மீட்பு

மோசடி கும்பலில் சிக்கிய 11 இந்தியர்கள் மீட்பு

ADDED : ஜூலை 20, 2024 09:38 AM


Google News
புதுடில்லி : நம் அண்டை நாடான மியான்மரில் உள்ள மியாவாடி நகரில் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, வெளிநாட்டு மக்களை ஏமாற்றி, சட்டவிரோதமாக சூதாட்டம், ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் சில கும்பல்கள் ஈடுபடுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற அந்நாட்டு போலீசார், அக்கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது.

இதில், சில இந்தியர்களும் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 11 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மியான்மர் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில், அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us