ADDED : ஜூலை 10, 2024 02:08 AM
மாஸ்கோவில் உள்ள அனைத்து ரஷ்ய கண்காட்சி மையத்தை, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து, பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார். அங்குள்ள அணுசக்தி தொடர்பான பிரிவை, ரஷ்ய எரிசக்தி கழகத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் சுற்றிக்காட்டி விரிவாக விளக்கினார்.
அப்போது, இந்தியாவில் சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை அமைக்க தேவையான ஒத்துழைப்பை அளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'அணுசக்தி தொழில்நுட்பத்தை அமைதிக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு என்பது ரஷ்யா உடனான பன்முக ஒத்துழைப்பின் முக்கிய துாண்' என, குறிப்பிட்டுள்ளார்.