Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை

ADDED : மார் 23, 2025 07:56 PM


Google News
Latest Tamil News
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஏறுமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து, 76,906 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து, 23,350 புள்ளிகளாக இருந்தது. வங்கி துறை பங்குகள் ஏறுமுகம் கண்டன.

இந்த ஆண்டு இரண்டு முறை வட்டி குறைப்புக்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்தது, உள்ளூர் சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டிய நிலை குறைந்து, பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஏறுமுகம் கண்ட பங்குகள்


1. என்.டி.பி.சி.,- 351.15 (2.78)
2. பஜாஜ் பைனான்ஸ்- 8,918.60 (2.75)
3. கோடக் மகிந்திரா- 2,084.40 (2.41)



இறங்குமுகம் கண்ட பங்குகள்


1. இன்போசிஸ் - 1,592.60 (1.34)
2. டாடா ஸ்டீல் - 157.25 (1.10)
3. எம் அண்டு எம்- 2,799.30 (1.08)







      Our Apps Available On




      Dinamalar

      Follow us