Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ADDED : மார் 26, 2025 12:16 AM


Google News
Latest Tamil News

தொடரும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை


வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் லேசான உயர்வுடன் நிறைவு செய்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வருகை, அமெரிக்க சந்தைகள் உயர்வு காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, இந்திய சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் சாதகமாக இருக்கும் என, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

இருப்பினும், டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான அச்சம் நீடிப்பதால், முன்னெச்சரிக்கையாக ஸ்மால், மிட்கேப் நிறுவனங்களின் பங்குகளை விற்று, லாபத்தை பதிவு செய்தனர். இதன் காரணமாக, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சந்தையில் அதிக ஊசலாட்டம் காணப்பட்டது. முடிவில், தொடர்ச்சியாக, ஏழாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 5,372 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.53 சதவீதம் உயர்ந்து, 73.39 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்து, 85.72 ரூபாயாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us