
ஜூன் காலாண்டில் சென்னையில் வீடு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
நாட்டின் ஒன்பது முக்கிய நகரங்களில் தேவை குறைவின் காரணமாக, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வீடு விற்பனை எண்ணிக்கை 19 சதவீதம் சரிந்து, 94,864 ஆக இருக்கும் என, ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஈவிட்டி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,16,432 ஆக இருந்தது.
பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையம் அமைக்க என்.எல்.சி.,யுடன் ஒப்பந்தம்
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.எல்.சி., புதுபிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், தமிழகத்தில் மூன்று தனித்தனி பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் எனப்படும் பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையங்களை அமைக்க, தமிழக பசுமை எரிசக்தி கழகத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரலில் இ.பி.எப்.ஓ., உறுப்பினர்கள் எண்ணிக்கை 19.14 லட்சமாக உயர்வு
இ.பி.எப்.ஓ., கடந்த ஏப்ரலில் 19.14 லட்சம் நிகர உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் கட்டண மோசடிகளை தடுக்கவிரைவில் பொது உள்கட்டமைப்பு தளம்
டிஜிட்டல் கட்டண மோசடிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகள் வேகம் எடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, வங்கி மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், முந்தைய நிதியாண்டில் 12,230 கோடி ரூபாயாக இருந்த மோசடி மதிப்பு, கடந்த நிதியாண்டில் 36,014 கோடி ரூபாயாக, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.