Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பங்கு சந்தை நிலவரம் : ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்றம்

பங்கு சந்தை நிலவரம் : ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்றம்

பங்கு சந்தை நிலவரம் : ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்றம்

பங்கு சந்தை நிலவரம் : ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்றம்

ADDED : செப் 05, 2025 12:03 AM


Google News
Latest Tamil News

ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்றம்


வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான பங்குச்சந்தை குறியீடுகள் லேசான ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் பல்வேறு பொருட்களின் வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.

தொடர்ந்து,வாகனம்,நுகர்பொருட்கள் சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர்.

மறுபுறம் ஜி.எஸ்.டி., உயர்த்தப்பட்ட பொருட்களின் எதிர்மறை தாக்கம் காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் ஊசலாட்டத்துடன் வர்த்தகமாகின.சென்செக்ஸ் 900 புள்ளிகளுடன் காலையில் எழுச்சியோடு துவங்கிய நிலையில், படிப்படியாக குறைந்து, தடுமாற்றம் கண்டு, முடிவில் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

உலக சந்தைகள்


புதனன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்; சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் சரிவுடனும் முடிவடைந்தன. பெரும்பாலான ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்


1 ஜி.எஸ்.டி., குறைப்பால் நிலவிய நேர்மறை தாக்கம்

2வாகனத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 106 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.08 சதவீதம் குறைந்து, 68.87 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 10 பைசா குறைந்து, 88.12 ரூபாயாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us