சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி., நோட்டீஸ் ரத்து செய்தது மும்பை ஐகோர்ட் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்தது நிம்மதி
சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி., நோட்டீஸ் ரத்து செய்தது மும்பை ஐகோர்ட் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்தது நிம்மதி
சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி., நோட்டீஸ் ரத்து செய்தது மும்பை ஐகோர்ட் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்தது நிம்மதி
UPDATED : செப் 14, 2025 12:30 AM
ADDED : செப் 14, 2025 12:27 AM

மும்பை:ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விதியை பயன்படுத்தி, ஏற்றுமதியாளர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை, மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
![]() |
ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் விதி 96(10) என்பது சில வரிச்சலுகைகளைப் பயன்படுத்தும் ஏற்றுமதியாளர்கள், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., தள்ளுபடியை பெற தடையாக இருந்தது. இந்த விதி தொடர்பாக, பல ஆண்டுகளாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இடையே சர்ச்சை, குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு முறை விதிகள் நீக்கப்பட்ட பின்னர், அதன் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் தாமாக முடிவுக்கு வந்துவிடும். பழைய வழக்குகளுக்கான விதிகள் நீக்கப்பட்ட பின்னர், வழக்குகள் தொடர எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. விசாரணைகள் அல்லது மேல்முறையீடுகளின் போது செலுத்தப்பட்ட தொகைகளை, ஏற்றுமதியாளர்கள் உடனடியாக திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், ரீபண்டு தொகைக்கு வட்டியும் சேர்த்துத் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
![]() |