Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ துளிகள்

துளிகள்

துளிகள்

துளிகள்

ADDED : அக் 09, 2025 01:43 AM


Google News
Latest Tamil News

உள் நாட்டில் தயாராகும் 112 கப்பல்கள்


ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து, 112 கப்பல்களை தயாரிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சரக்கு கட்டணமாக செலவிடப்படும் 6 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி தொகை குறைக்கும் நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளது. மேலும், வரும் 2047க்குள் 31 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளது.

பேமென்ட் சேவை: பிரிட்டன் நிறுவனம் முதலீடு


இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் செயலி சேவையை துவங்க இருப்பதாக லண்டனைச் சேர்ந்த பின்டெக் நிறுவனமான ரிவோல்ட் அறிவித்து உள்ளது. இதற்காக, இந்நிறுவனம் 470 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இது குறித்து ரிவோல்ட் இந்தியாவின் சி.இ.ஓ. பரோமா சாட்டர்ஜி கூறுகையில், 'வரும் 2030க்குள் 2 கோடி பேரை, குறிப்பாக இளம் வாடிக்கையாளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இது தவிர, அன்னிய செலாவணி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளோம்' என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us