Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ முன் பணம் பெறும் வசதி பி.எப்., நிறுவனம் நிறுத்தியது

முன் பணம் பெறும் வசதி பி.எப்., நிறுவனம் நிறுத்தியது

முன் பணம் பெறும் வசதி பி.எப்., நிறுவனம் நிறுத்தியது

முன் பணம் பெறும் வசதி பி.எப்., நிறுவனம் நிறுத்தியது

ADDED : ஜூன் 15, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:கொரோனா தொற்றின் போது, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள தங்கள் கணக்கில் இருந்து முன்பணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக, இ.பி.எப்., நிறுவனம் அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இதனை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு உதவிட, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முன்வந்தது.

அந்த அறிவிப்பில், பணியாளர்கள் தங்கள் இ.பி.எப்., கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீத பணத்தை, திருப்பி செலுத்தாத முன் பணமாக பெற்றுக்கொள்ளலாம் என, கடந்த 2020 மார்ச்சில் அறிவித்தது.

மேலும், இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு, கடந்த 2021 ஜூன் முதல் மீண்டும் மற்றொரு முறை இந்த முன்பணம் எடுக்கும் வசதியை அறிவித்தது. இந்நிலையில், முன்பணம் எடுப்பது குறித்து இம்மாதம் 12ம் தேதி இ.பி.எப்., நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட முன்பணம் பெறும் வசதியை நிறுத்திக்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இது விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us