Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

ADDED : ஜூலை 31, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.

நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுகின்றன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திய நிலையில், அதன் பிறகும் இந்த தொகை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல வங்கிகள் காலாண்டு சராசரி இருப்பு வைத்திருக்காவிடில் அபராதம் வசூலிக்கின்றன. சில வங்கிகள் சராசரி மாதாந்திர இருப்பு வைத்திருக்காமல் இருந்தால், அபராதம் வசூலிக்கின்றன.

வங்கிகளின் வசூல்

வங்கிகள் அபராதம் (ரூ. கோடியில்) பேங்க் ஆப் பரோடா 1,251பேங்க் ஆப் இந்தியா 828பேங்க் ஆப் மகாராஷ்டிரா 471கனரா பேங்க் 1,158சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 587இந்தியன் பேங்க் 1,466இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 20பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் 55பஞ்சாப் நேஷனல் பேங்க் 1,538ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 640யூகோ பேங்க் 66யூனியன் பேங்க் ஆப் இந்தியா 415மொத்தம் 8,495காலகட்டம் (2019 -20 முதல் 2023 - 24 வரை)







      Our Apps Available On




      Dinamalar

      Follow us