
தண்ணீர் பிரச்னையால் வாரணாசி படப்பிடிப்பை தொடர்வதில் திடீர் சிக்கல்
இதற்காக ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நீச்சல் குளம் செட் அமைக்கப்பட்டு, ஒரு லாரிக்கு பத்தாயிரம் லிட்டர் என கிட்டத்தட்ட 150 லாரி தண்ணீர் தேவை என நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது ஐதராபாத்தில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பதால், பொதுமக்களின் குடிநீர் சேவையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரைப் படப்பிடிப்பிற்கு வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, படக்குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மே மாதம் முழுவதுமே ஐதராபாத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது..
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!