
பாலிவுட் நடிகை நூர் மாளபிகா தாஸ் தற்கொலை
ஜூன் 11, 2024
Advertisement
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாகவே அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நூர் மாளபிகா தாஸ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருக்கு வயது 34.
இதுகுறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஒரு தொண்டு நிறுவனம் இறுதிச்சடங்கை நடத்தி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூர் மாளபிகாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து நூர் மாளபிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. நூர் மாளபிகா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நூர் மாளபிகா தாஸ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருக்கு வயது 34.
இதுகுறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஒரு தொண்டு நிறுவனம் இறுதிச்சடங்கை நடத்தி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூர் மாளபிகாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து நூர் மாளபிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. நூர் மாளபிகா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!