Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

ADDED : மார் 12, 2025 01:17 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு தமிழக அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழு அழைப்பு விடுத்தது.

லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழுவினர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து சென்னையில் தமிழக அரசு சார்பில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினர்.

அதேபோல், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர்கள் குழுவினர் சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us