Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொலு போட்டிக்கு அழைப்பு

கொலு போட்டிக்கு அழைப்பு

கொலு போட்டிக்கு அழைப்பு

கொலு போட்டிக்கு அழைப்பு

ADDED : செப் 18, 2025 07:53 AM


Google News
தசராவின் ஒரு பகுதியாக, ஸ்ரீராஜிவ் ஸ்நேகா பாலகா, விப்ரா மகிளா சங்கம், கிருஷ்ணா அழைக்கிறார் நல அறக்கட்டளை இணைந்து 'வீட்டு வீடு கொலு போட்டி' வரும் 22ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை நடத்துகிறது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள், தங்கள் வீடுகளில் கொலு அலங்காரம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டுக்கு காலை 11:00 முதல் இரவு 7:00 மணிக்குள் நடுவர் குழுவினர் உங்கள் வீட்டுக்கு வருகை தருவர்.

மைசூரு மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். முதல் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடுன், 25 பேருக்கு ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், வரும் 20ம் தேதிக்குள் 99001 52867 அல்லது 96119 66290 என்ற மொபைல் போனில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us