/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு

புதிய பாலம்
தற்போது அந்த சாலையில் குசமலி என்ற இடத்தில், புதிதாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் பாலம் வேலை நடக்கும் இடத்தின் அருகே, தற்காலிக சாலை அமைக்கப்பட்டு குறுக்கே, தரைப்பாலமும் கட்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து குசமலி கிராமத்தில் பெய்த கனமழையால், அந்த கிராமத்தில் ஓடும் மல்லபிரபா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
சோளம், கரும்பு
பல்லாரியின் சண்டூரில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கனமழையால், நாரிஹல்லா அணை நிரம்பி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. கதக்கின் ரோன் தாலுகா யவகல் கிராமத்தில் ஓடும் நாரிஹல்லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
மண் குவியல்
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரில் நேற்று 2வது நாளாக, கனமழை கொட்டி தீர்த்தது. கங்கனாடி என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து எதிரே இருந்த, வீட்டின் இரும்பு கேட் மீது விழுந்தது.
ரயில் தாமதம்
மங்களூரின் படில் - ஜோகட்டே இடையில் ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்தது. மண்ணை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நடந்ததால், ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.