/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பியவர் மீது வழக்கு காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பியவர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பியவர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பியவர் மீது வழக்கு
காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பியவர் மீது வழக்கு
ADDED : மே 30, 2025 11:33 PM
சி.கே.அச்சுக்கட்டு: பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டை சேர்ந்தவர் பரத், 25. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 22 வயது இளம்பெண் அறிமுகம் கிடைத்தது. இருவரும் மொபைல் போனில் பேசினர். நாளடைவில் காதலித்தனர்.
திருமணம் செய்வதாக கூறி காதலியுடன், பரத் உல்லாசமாக இருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு காதலியை சந்தித்த பரத், 'என் வீட்டில் உன்னை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறி உன்னை திருமணம் செய்கிறேன்' என்று கூறி உள்ளார். இதை நம்பி காதலியின் வீட்டினர், திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக பரத்தை, காதலியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் வெளிநாடு சென்றது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் குடும்பத்தினர், பரத் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர்.
அப்போது, இளம்பெண் பெற்றோரை, பரத் பெற்றோர் ஆபாசமாக திட்டி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரில் பரத், அவரது தந்தை சூரிய பிரசாத், தாய் அனுராதா, சகோதரி ரஞ்சிதா ஆகியோர் மீது நேற்று முன்தினம் சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.