/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை
மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை
மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை
மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை

துவக்கம்
தன் கல்லுாரி படிப்பிற்காக கோவைக்கு சென்றார். அங்கு நிதி மற்றும் வணிகம் தொடர்பான பாடத்தில் பட்டம் பெற்றார். ஆனால், இவருக்கு இயற்கை குறித்து படிக்க வேண்டும் என்ற ஆசை துவக்கத்தில் இருந்தே இருந்தது. இதற்கான, ஒரு வாய்ப்பாக பெங்களூரில் யானை வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்வது குறித்து வேலை இருப்பதாக அறிந்து கொண்டார்.
சிறப்பு வகுப்பு
அப்போது, அவர் குழந்தைகளுக்கு இயற்கை குறித்து ஜாலியான முறையில், சிறப்பு வகுப்பு எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்காக, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தார். 2020ம் ஆண்டு, கொரோனோவிற்கு முன்பு, கப்பன் பூங்காவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
சந்தோஷம்
எனவே, அவரது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் சிறப்பான கருத்துகளை கூறியிருந்தனர். இதை கேட்ட பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதை பார்த்த சாய்தேவி சந்தோஷத்தில் விண்ணில் பறந்தார். தன் வகுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்தார். அப்போது, கொரோனோ தொற்று வந்ததால், அவரால் அதை செய்ய முடியவில்லை.
நோக்கம்
இதன் முக்கிய நோக்கமே மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் இயற்கை குறித்து பாடம் கற்பிப்பது மற்றும் மாணவர்களை கேள்வி கேட்க வைப்பது. சிறிய அளவிலான பள்ளிகளில் தொடர்பு கொண்டு, தன் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.