Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி

சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி

சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி

சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி

ADDED : ஜூன் 08, 2025 04:05 AM


Google News
வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதை தடுப்புச்சுவரில் சொருகி நின்றதில், கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நடைபாதை தடுப்புச்சுவர் மீது, நேற்று மாலை 4:30 மணிக்கு, 'இன்னோவா' கார் மோதியது. அந்த தடுப்புச்சுவரை உடைத்து கார் சிக்கிக்கொண்டது. காரின் பாகங்கள் உடைந்து சிதறின.

போலீசார் விரைந்து வந்து, 'கிரேன்' உதவியுடன் தடுப்புச்சுவரை உடைத்து, காரை மீட்டனர். காருக்குள் சிக்கியிருந்த, 7 பேரையும் மீட்டனர். அவர்களில் 3 பேர் இறந்துவிட்டது தெரிந்தது. படுகாயம் அடைந்திருந்த 4 பேரை மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்தில், வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் குடும்பத்தினர் ஒன்றாக காரில், திருவண்ணாமலை, அண்மலையார் கோவிலுக்கு சென்றனர். பின் இன்று ஈரோட்டில் நடக்க உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு புறப்பட்டனர்.

காரை, ஜோகாராம், 59, என்பவர் ஓட்டினார். அவர்களது குடும்பத்தினர் உள்பட, 7 பேர் பயணம் செய்தனர். இதில் ராணாராம், 55, அவரது மனைவி ஜோதிதேவி, 50, ராணாராமின் தம்பியான ஜோகாராம், 59, ஜோகிதேவி, 55, ஆகியோர் உயிரிழந்தனர்.

தவிர, அம்மியா, 43, ஜோதாராம், 65, ஜோகிதேவி, 57, ஆகியோர் படுகாயம் அடைந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் அதிவேகமாக வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us