/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவுபெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு
பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு
பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு
பெங்களூருவில் உணவகங்களில் நாய் இறைச்சி சப்ளையா ? : ஆய்வுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 27, 2024 08:19 PM

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹோட்டகள், உணவகங்களுக்கு ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து விநியோகிப்படுவதாக எழுந்த புகாரில் உணவுபாது காப்பு தர நிர்ணய ஆணையம் உரிய ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று கர்நாடகா மாநிலம் மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியது, பெங்களூரு ஹோட்டல்கள், உணவகங்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் ஆட்டிறைச்சி மற்றும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் நாய் இறைச்சியும் கலந்து பெங்களூருவில் விற்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது என்றார்.
இதையடுத்து கர்நாடகா உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் இன்று ராஜஸ்தானிலிருந்து பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் வந்திறங்கிய 90 பார்ச்ல்களை ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.