Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/நம்மூர் மண்ணிலும் கிவி பழம்

நம்மூர் மண்ணிலும் கிவி பழம்

நம்மூர் மண்ணிலும் கிவி பழம்

நம்மூர் மண்ணிலும் கிவி பழம்

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
கிவி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான மலை மண் சார்ந்த செம்மண் நிலம். இந்த மண்ணில் டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், கிவி பழம் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.

நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷண நிலைகளை தாங்கி வளர்கிறது. நம்மூர் மலை சார்ந்த செம்மண்ணுக்கு நன்றாக வளர்கிறது. குறிப்பாக, கிவி பழத்தில் குறைந்த கலோரிகள் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. மேலும், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல், நினைவாற்றல் மேம்படுத்துதல் ஆகியவை இருப்பதால், சந்தையில் விற்பனைக்கு பஞ்சமும், வருவாய் குறைவும்இருக்காது.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: கே.வெங்கடபதி,

93829 61000






      Our Apps Available On




      Dinamalar

      Follow us