PUBLISHED ON : ஏப் 21, 2024

டி.மாதவன், கோவை: எப்படி வாழ்வது மகிழ்ச்சியைத் தரும்?
சிக்கனமாக வாழ்பவர்களே, மகிழ்ச்சியாக இருக்க முடியும்!
தே.ராஜ், மதுரை: நட்பு யாருடன் இருக்க வேண்டும்?
நல்லவரிடம்! அப்படி ஒருவரிடம் நட்பு பாராட்டினால், உங்களை அறியாமையில் இருந்து, அறிவு பாதைக்கு அழைத்து செல்லும்!
எம்.இசக்கி, திருச்சி: இந்நாளில், யாரை புத்திசாலி என நினைக்கலாம்?
மனதிற்கு பிடித்த வேலையை யாரும் சிறப்பாக செய்து விடலாம்; அவன் திறமைசாலி. தனக்கு பிடிக்காத வேலையையும் தனக்கு பிடித்தபடி அமைத்துக் கொண்டு, அதை சிறப்பாக செய்பவன் புத்திசாலி!
எம்.அன்பழகன், நெல்லை: என் நண்பனிடம் அகங்காரம் அதிகம் உள்ளதே... அவனை எப்படித் திருத்துவது?
அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கிவிட்டால், நரக துன்பத்தை பின்னாளில், அனுபவிக்கும் நிலை உண்டாகும் என்று உங்கள் நண்பரிடம் கூறுங்கள்!
* கே.நடேஷ், புதுச்சேரி: ஒரு நல்லரசு எப்படி இருக்க வேண்டும்?
அரசியல் நெறி பிறழாமல், அறம் அற்றவற்றை நீக்கி, வீரத்தையும், மானத்தையும் முன்னிறுத்துவதே, நல்லரசாக இருக்கும்!
* மு.சிவா, சென்னை: என் மதிப்பு வளர, நான் என்ன செய்ய வேண்டும்?
நாக்கையும், பர்சையும் அதிகமாகத் திறக்காதீர்கள்... அப்போது, தான் உங்கள் மதிப்பும், செல்வமும் வளரும்.
எம்.ராஜ், நெல்லை: எதில் நலம் காணலாம்?
எண்ணத்திற்கேற்ப வசதிகளை பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களைக் குறைத்துக் கொள்வதில் நலம் காணலாம்!
சிக்கனமாக வாழ்பவர்களே, மகிழ்ச்சியாக இருக்க முடியும்!
தே.ராஜ், மதுரை: நட்பு யாருடன் இருக்க வேண்டும்?
நல்லவரிடம்! அப்படி ஒருவரிடம் நட்பு பாராட்டினால், உங்களை அறியாமையில் இருந்து, அறிவு பாதைக்கு அழைத்து செல்லும்!
எம்.இசக்கி, திருச்சி: இந்நாளில், யாரை புத்திசாலி என நினைக்கலாம்?
மனதிற்கு பிடித்த வேலையை யாரும் சிறப்பாக செய்து விடலாம்; அவன் திறமைசாலி. தனக்கு பிடிக்காத வேலையையும் தனக்கு பிடித்தபடி அமைத்துக் கொண்டு, அதை சிறப்பாக செய்பவன் புத்திசாலி!
எம்.அன்பழகன், நெல்லை: என் நண்பனிடம் அகங்காரம் அதிகம் உள்ளதே... அவனை எப்படித் திருத்துவது?
அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கிவிட்டால், நரக துன்பத்தை பின்னாளில், அனுபவிக்கும் நிலை உண்டாகும் என்று உங்கள் நண்பரிடம் கூறுங்கள்!
* கே.நடேஷ், புதுச்சேரி: ஒரு நல்லரசு எப்படி இருக்க வேண்டும்?
அரசியல் நெறி பிறழாமல், அறம் அற்றவற்றை நீக்கி, வீரத்தையும், மானத்தையும் முன்னிறுத்துவதே, நல்லரசாக இருக்கும்!
* மு.சிவா, சென்னை: என் மதிப்பு வளர, நான் என்ன செய்ய வேண்டும்?
நாக்கையும், பர்சையும் அதிகமாகத் திறக்காதீர்கள்... அப்போது, தான் உங்கள் மதிப்பும், செல்வமும் வளரும்.
எம்.ராஜ், நெல்லை: எதில் நலம் காணலாம்?
எண்ணத்திற்கேற்ப வசதிகளை பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களைக் குறைத்துக் கொள்வதில் நலம் காணலாம்!