கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...
கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...
கவிதைச்சோலை - வெள்ளம் வரும் முன்...
PUBLISHED ON : ஜன 28, 2024

* மறக்க வேண்டியவற்றை
நினைவில் வைத்து வாடுகிறோம்
விலக்க வேண்டியவற்றை
சேர்த்துக் கொண்டு அவதியுறுகிறோம்!
* தொலைக்க வேண்டியவற்றை
பற்றிக் கொண்டு கிடக்கிறோம்
ஒழிக்க வேண்டியவற்றை
வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்!
* புறக்கணிக்க வேண்டியவற்றை
ஆதரித்து தவிக்கிறோம்
அழிக்க வேண்டியவற்றை
உரமிட்டு, நீரூற்றி வளர்க்கிறோம்!
* தவிர்க்க வேண்டியவற்றை
பின்பற்றி வருந்துகிறோம்
களையெடுக்க வேண்டியவற்றை
விட்டு வைத்து தொடர்கிறோம்!
* எரிக்க வேண்டியவற்றை
பாதுகாத்து வைக்கிறோம்
புதைக்க வேண்டியவற்றை
பின் தொடர செய்கிறோம்!
* கழிக்க வேண்டியவற்றை
கூட்டிக்கொண்டு செல்கிறோம்
ஒதுக்க வேண்டியவற்றை
பிணைத்தபடி அழுகிறோம்!
* முன்னெச்சரிக்கை உணர்வை
முற்றிலும் தொலைத்தோம்
விழிப்புணர்வு திறனை
பொறுப்பின்றி தவற விட்டோம்!
* வெள்ளம் வரும் முன் அணையிடும்
கடமையிலிருந்து தவறுகிறோம்
ஆயுள் முழுவதற்குள் வாழ்ந்திடும்
வாய்ப்பை கை நழுவ விடுகிறோம்!
- ஆர். ஜெயசங்கரன்,
வானூர், விழுப்புரம்
நினைவில் வைத்து வாடுகிறோம்
விலக்க வேண்டியவற்றை
சேர்த்துக் கொண்டு அவதியுறுகிறோம்!
* தொலைக்க வேண்டியவற்றை
பற்றிக் கொண்டு கிடக்கிறோம்
ஒழிக்க வேண்டியவற்றை
வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்!
* புறக்கணிக்க வேண்டியவற்றை
ஆதரித்து தவிக்கிறோம்
அழிக்க வேண்டியவற்றை
உரமிட்டு, நீரூற்றி வளர்க்கிறோம்!
* தவிர்க்க வேண்டியவற்றை
பின்பற்றி வருந்துகிறோம்
களையெடுக்க வேண்டியவற்றை
விட்டு வைத்து தொடர்கிறோம்!
* எரிக்க வேண்டியவற்றை
பாதுகாத்து வைக்கிறோம்
புதைக்க வேண்டியவற்றை
பின் தொடர செய்கிறோம்!
* கழிக்க வேண்டியவற்றை
கூட்டிக்கொண்டு செல்கிறோம்
ஒதுக்க வேண்டியவற்றை
பிணைத்தபடி அழுகிறோம்!
* முன்னெச்சரிக்கை உணர்வை
முற்றிலும் தொலைத்தோம்
விழிப்புணர்வு திறனை
பொறுப்பின்றி தவற விட்டோம்!
* வெள்ளம் வரும் முன் அணையிடும்
கடமையிலிருந்து தவறுகிறோம்
ஆயுள் முழுவதற்குள் வாழ்ந்திடும்
வாய்ப்பை கை நழுவ விடுகிறோம்!
- ஆர். ஜெயசங்கரன்,
வானூர், விழுப்புரம்