/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!
கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!
கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!
கவிதைச்சோலை - முடியாத செயல்களையும் முடித்து காட்டுவோம்!
PUBLISHED ON : ஜன 26, 2025

பாரதத்தின் உரிமைகளை
பெற்றுயர்ந்த நாள்
உரிமைதனைப் பெற்றுயர
கடமை செய்யும் நாள்!
புவியெல்லாம் நம் திறனை
புரிந்து கொள்ளும் நாள்
புரிந்துணர்ந்து அன்னியர்கள்
தெரிந்தளித்த நாள்!
பட்ட துயர் விட்ட உயிர்
பெற்றுத் தந்த நாள்
ஒட்டுமொத்த வெள்ளையரை
ஓட வைத்த நாள்!
சத்தியமே உருவெடுத்து
வந்த தலைவர்கள்
சாதிப்பதைச் சபதமேற்க
தேர்ந்தெடுத்த நாள்!
அகிம்சை என்ற ஆயுதமே
அறிவு கண்ட நாள்
அகிம்சையோடு ஆற்றலெல்லாம்
தந்து விட்ட நாள்!
உரிமையென்று பெற்றதனால்
உறங்கிட வேண்டாம்
கணக்குகளில் கடமைதனை
கண்டெடுத்த நாள்!
இன்னும் உண்டு எத்தனையோ
காலமும், வாய்ப்பும்
ஏற்றுக் கொண்ட குடியரசில்
ஏற்றங் காட்டுவோம்!
குடியரசு நாளிதனை
கொண்டாடுவோம்
முடியாத செயல்களையும்
முடித்துக் காட்டுவோம்!
— சி. என். நாகராஜன்,
கோவை.
பெற்றுயர்ந்த நாள்
உரிமைதனைப் பெற்றுயர
கடமை செய்யும் நாள்!
புவியெல்லாம் நம் திறனை
புரிந்து கொள்ளும் நாள்
புரிந்துணர்ந்து அன்னியர்கள்
தெரிந்தளித்த நாள்!
பட்ட துயர் விட்ட உயிர்
பெற்றுத் தந்த நாள்
ஒட்டுமொத்த வெள்ளையரை
ஓட வைத்த நாள்!
சத்தியமே உருவெடுத்து
வந்த தலைவர்கள்
சாதிப்பதைச் சபதமேற்க
தேர்ந்தெடுத்த நாள்!
அகிம்சை என்ற ஆயுதமே
அறிவு கண்ட நாள்
அகிம்சையோடு ஆற்றலெல்லாம்
தந்து விட்ட நாள்!
உரிமையென்று பெற்றதனால்
உறங்கிட வேண்டாம்
கணக்குகளில் கடமைதனை
கண்டெடுத்த நாள்!
இன்னும் உண்டு எத்தனையோ
காலமும், வாய்ப்பும்
ஏற்றுக் கொண்ட குடியரசில்
ஏற்றங் காட்டுவோம்!
குடியரசு நாளிதனை
கொண்டாடுவோம்
முடியாத செயல்களையும்
முடித்துக் காட்டுவோம்!
— சி. என். நாகராஜன்,
கோவை.