PUBLISHED ON : மார் 24, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
உலக காசநோய் தினம்
ஜெர்மன் விஞ்ஞானி ராபர்ட் கோச், 1882 மார்ச் 24ல் 'காசநோயை' உருவாக்கும் பாக்டீரியாவை கண்டு பிடித்தார். இது அந்நோயை கண்டறிந்து குணப்படுத்த உதவியது. இவரின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடை பிடிக்கப்படுகிறது. 'ஆம், காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்: உறுதிசெய், முதலீடு, விடுவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2023ல் 1.08 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டனர். 12.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2000ல் இருந்து 7.9 கோடி பேர் உயிர்பிழைத்தனர்.