PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

உலக தண்ணீர் தினம்
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று. தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பனிப்பாறை பாதுகாப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருகிறது. இதனால் வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஆபத்து உருவாகிறது. வெள்ளம், கடல் நீர்மட்ட உயர்வுக்கும் காரணமாகிறது. பூமியின் 70 சதவீத நன்னீர் பனிப்பாறையை சார்ந்தே உள்ளது.