/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'பக்' கோப்பை கால்பந்தில் ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன் 'பக்' கோப்பை கால்பந்தில் ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்
'பக்' கோப்பை கால்பந்தில் ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்
'பக்' கோப்பை கால்பந்தில் ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்
'பக்' கோப்பை கால்பந்தில் ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்
PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
வாலிபால், தடகளம் உட்பட 18 போட்டிகளில் 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். ஆடவருக்கான கால்பந்து இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
ஒய்.எம்.சி.ஏ., மற்றும் லயோலா அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும், போட்டியின் துவக்கத்தில் இருந்தே சமநிலையில் வந்தனர். முடிவில், 7 - 6 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. மற்ற போட்டிகள் நடக்கின்றன.