ADDED : ஜூன் 04, 2024 06:22 AM

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் -- -சிறுவாக்கம் மோட்டூர் இடையே, 4 கி.மீ., துாரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் காணப்படுகின்றன.
இவை, அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில், காயத்தை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க, சாலை ஓரம் உள்ள மரங்களை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இன்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -டி.ஜனார்த்தனன், ஈஞ்சம்பாக்கம்.