/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல் காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்
ADDED : ஜூலை 11, 2024 12:29 AM

ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஓரிக்கை பாலாறு உயர்மட்ட பால சாலையின் இரு ஓரங்களிலும், எம்.சாண்ட் மணல் குவியல் அதிகமாக உள்ளது. இதனால், மழைநீர் வெளியேறும் ஓட்டைகள் அடைபட்டுள்ளன.
இதனால், மழை பெய்யும்போது, மழைநீர் வெளியேற வழியில்லாமல், பாலத்தின் மீதுள்ள சாலையில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மேலும், சாலையும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, ஓரிக்கை பாலாறு மேம்பால சாலையோரம் உள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.மோகன்,
காஞ்சிபுரம்.