/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம்: புகார் பெட்டி சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா? காஞ்சிபுரம்: புகார் பெட்டி சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?

சாலை நடுவில் மின்கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி 47வது வார்டு, ஓரிக்கை, முரளி நகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் கட்டுமானப் பணிக்காக செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை எடுத்து வரும் லாரிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
சாலையில் நீண்டுள்ள கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டு கம்மாள தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால்வாய் தளத்தில் சிமென்ட் பூச்சு கலவை பெயர்ந்துள்ளதால், அதில், உள்ள கம்பிகள் வெளியே நீண்டுள்ளது.
உத்திரமேரூர் - ஆற்பாக்கம் இடையே கட் - சர்வீஸ் பேருந்து வேண்டும்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள ஆற்பாக்கம், வெங்கச்சேரி, ஆதவபாக்கம், கடம்பர்கோவில், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருத்துவான்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் உத்திரமேரூர், திருப்புலிவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை கல்லுாரியிலும் பயின்று வருகின்றனர்.