ADDED : ஜூலை 15, 2024 11:36 PM
மின் விளக்குகள் எரியவில்லை
கருவடிகுப்பம் ராஜிவ்காந்தி நகர் முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு தெருவில் மின்விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி, கருவடிக்குப்பம்.
பேனர்களால் இடையூறு
காலாப்பட்டு மெயின் ரோட்டில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது.
மோகன், காலாப்பட்டு.
அறுந்து தொங்கும் மின் விளக்கு
அரியாங்குப்பம் காந்தி நகரில், 2வது குறுக்கு தெருவில், மின் கம்பத்தில் இருந்து மின் விளக்கு அறுந்து தொங்கிய நிலையில் உள்ளது.
கார்த்திகேயன், அரியாங்குப்பம்.
ஜல்லிகள் கொட்டி கிடப்பதால் இடையூறு
கருவடிகுப்பம் விஷ்ணு நகர் மற்றும் அய்யனார் கோவில் தெருவில், ஜல்லிகள் கொட்டி இருப்பதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
கார்த்திகேயன், அரியாங்குப்பம்.