
ஜாதி ஒழிப்பை விட சண்டை வளர்க்கிறாரே?
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், கடந்த ஆண்டு அரசு
பள்ளி மாணவனின் வீடு புகுந்து, சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம்
நடந்தது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே, ஜாதி, இன
உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம்
ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும், தமிழக அரசு, ஓய்வு பெற்ற
நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர், இப்போது 650
பக்கங்கள் கொண்ட அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.
முற்போக்கு சிந்தனை வேண்டும்!
பி.வி.ரவிகுமார்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சி,
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு
மேல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது.